Sunday, June 15, 2008

ஆன்மீக நரகம்

















ஆன்மீக பூமியிலே
நாளுக்கு ஓர் உயிர்க்கொலை
அமைதியான நகரத்தில்
அடைப்பு நாட்கள் ஏராளம்!

கொலைகள் இங்கே
மலிவாக நடக்கிறது!
கால் அரை பாட்டில்களுக்கும்
காசுகளின் தேவைக்கும்!

விலங்குகள் வேட்டையாடுவது
உணவுக்கு மட்டுமே
மாந்தனின் வேட்டைக்கு
1008 காரணங்கள்...

சிந்திக்க நேரமின்றி
சிதறடிக்கப்படும் மூளைகள்!
நற்பயிராகாமல் இங்கே
நச்சுக் களைகளாகின்றன!

கை கட்டும் அதிகாரிகள்
காவலுக்கு அரசியல்வாதிகள்
காடையர்களின் துணிகரம்
கனமழையாய் இன்னும்.....




No comments: