Monday, June 9, 2008

பசி

உலகில் பிறந்த
ஒவ்வொரு உயிருக்கும்
முதல் நோய் பசி

வளர்கின்ற பொழுதில்
கட்டாயத் தேவை
அன்புப் பசி

வளர்ந்த பின்
உலகை அறிய
அறிவுப் பசி

ஆளான பருவத்தில்
அரும்பி மலர்ந்திடும்
உடல் பசி

வாழ்வை வளமோடு
வாழ்ந்திட தேடிடும்
பொருள் பசி

உறவுகளின் துணையோடு
வாழ்கின்ற காலத்தில் வரும்
கடமைப் பசி

ஊருக்கு உழைக்கின்ற
அரிதான சிலரிடம்
காண்பது ஈகைப் பசி

அகவை முதிர்ந்து
ஏங்கும் மனதினில்
வந்திடும் தனிமைப் பசி

எல்லோர்க்கும் ஒரு நாள்
இறுதியாக வரும்
மரணப் பசி.

No comments: