உலகில் பிறந்த
ஒவ்வொரு உயிருக்கும்
முதல் நோய் பசி
வளர்கின்ற பொழுதில்
கட்டாயத் தேவை
அன்புப் பசி
வளர்ந்த பின்
உலகை அறிய
அறிவுப் பசி
ஆளான பருவத்தில்
அரும்பி மலர்ந்திடும்
உடல் பசி
வாழ்வை வளமோடு
வாழ்ந்திட தேடிடும்
பொருள் பசி
உறவுகளின் துணையோடு
வாழ்கின்ற காலத்தில் வரும்
கடமைப் பசி
ஊருக்கு உழைக்கின்ற
அரிதான சிலரிடம்
காண்பது ஈகைப் பசி
அகவை முதிர்ந்து
ஏங்கும் மனதினில்
வந்திடும் தனிமைப் பசி
எல்லோர்க்கும் ஒரு நாள்
இறுதியாக வரும்
மரணப் பசி.
Monday, June 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment