Sunday, December 9, 2007

சேறுபடாதவன் கால்களில்
செருப்பு
கல்லெடுத்து வைக்காதவன்
கருவறைக்குள்
உழைப்பே இல்லாதவன்...
நிலக்கிழார்
சமதர்மம் ஓடுகிறது
சாக்கடையாய்...
- செந்தமிழினியன்

1 comment:

யோகப்ரபா said...

கவிஞருக்குப் பாராட்டுக்கள்...

இக்கவிதையில் உங்களின் ஆதங்கம் வெளிப்படுவதைக் காண முடிகிறது.

கவிஞன் கவிதையாய் வாழ்பவன் என்பதை உணர்ந்து உங்கள் கவிப்பயணம் தொடர எனது வாழ்த்துக்கள்.
-யோகப்ரபா